Sunday, May 24, 2009

வே.பிரபாகரன் மரணமானார் - விடுதலைப் புலிகள் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வன்னியில் ஸ்ரீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமான யுத்தத்தில் கடந்த 2009.05.17 ம் திகதி மரணித்ததாக விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் சர்வதேச ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இனிமேல் விடுதலைப் புலிகள் அமைப்பு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து செயற்படவிருப்பதாகவும் அவர் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வே.பிரபாகரனும் மற்றும் தளபதிகளும் உயிருடன் இருப்பதாக அண்மைக் காலமாகப் பலதரப்பட்ட செய்திகளும் வெளியாகி இருப்பதனால் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் இச் செய்தியை தெரிவிப்பதாகவும், இனிமேல் விடுதலைப் புலிகள் சார்பான செய்திகள் தனது கையொப்பமின்றி அல்லது எனது வாய்மொழி உரையின்றி வருவனவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டாமென செல்வராஜா பத்மநாதன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்கள்:
பிபிசி தமிழோசை
அல்ஜசீரா