விழாவில் பங்கேற்ற கரைச்சி பிரதேச சபை, கண்டாவளை பிரதேச சபை, பளை பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகியவற்றில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
கண்டியில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு போட்டிக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி சார்பாக 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றவிருக்கும் செல்வி. விமலாதேவிக்கும் கராட்டி போட்டி பெண்கள் பிரிவில் பங்கேற்கவிருக்கும் செல்வி. செல்விகா ஆகியோருக்கு ஊக்குவிப்புப் பணமாக தலா 5000 ரூபாவினை, பா.உ. சந்திரகுமார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிதியிலிருந்து வழங்கியதுடன், இம் மாவட்டத்திலிருந்து தேசிய இளைஞர் சேவை மன்ற போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் அணிக்குரிய விளையாட்டு உடைகளை தான் வழங்குவதாகவும் தெரிவித்தார்.