அங்கு சென்று மீனவர்களைச் சந்தித்து அவர்களின் நாளாந்தப் பிரச்சினைகளையும் தேவைகளையும் அறிந்து அதற்கான முன்னெடுப்புகளை விரைவில் செய்வதாக
பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மீன்களை பழுதடையாமல் வைத்திருக்கத் தேவையான ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்யக் கூடிய ஐஸ் தொழிற்சாலையை பூநகரிப் பிரதேசத்தில் அமைத்துத் தரும்படி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வலைப்பாடுக் கடற்பகுதியில் இறால் வளர்ப்பு, அட்டை வளர்ப்புப் பகுதிகளையும் எம்.பி. சந்திரகுமார் சென்று பார்வையிட்டதுடன் இக் கடல் உணவு வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் மீனவர்களிடம் உறுதியளித்துள்ளார்.