Friday, June 18, 2010

கிளிநொச்சிக்கு அகாஷி, பசில் ராஜபக்ஷ விஜயம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மைச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக 2010.06.18 ஆம் திகதி ஜப்பானின் விசேட தூதுவர் அகாஷி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோர் வருகை தந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து உழவு இயந்திரங்களும், நீர் இறைக்கும் இயந்திரங்களும், மற்றும் அறுவடை இயந்திரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.