www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Friday, December 11, 2009

சர்வதேச மனித உரிமை தினத்தில் ஒரே மேடையில் தோன்றிய தமிழ்த் தலைமைகள்!

மனித உரிமைகள் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தினம் தொடர்பான மாபெரும் நிகழ்வு மனித உரிமைகள் இல்ல இயக்குனர் ஷெரீன் சேவியர் தலைமையில் கடந்த 2009.12.10 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (நாபா அணி) செயலாளர் சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியத்தர் திரு சங்கையா, யாழ்ப்பாண மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினரும் யாழ். மக்கள் பணிமனை தலைவருமான மௌலவி சுபியான் போன்றோர் ஒன்றாக ஒரே மேடை நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தனவுக்கு மேடையில் ஆசனம் ஒதுக்கப்படாமையினால் பார்வையாளர்களில் ஒருவராக முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளிடம் பார்வையாளர்கள் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து வினாக்கள் தொடுத்த போது அவ்வினாக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் ஒரே நேரத்தில் இணைந்து பதிலளித்தமை சிறப்பானதாக இருந்தது.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.