www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Friday, August 7, 2009

யாழ். மாநகரசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்துக்கு 75 சதவீத வாக்குகள் !

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது, இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அதன் பெறுபேறுகளை அறியக்கூடியதாக இருக்கும்.

இத் தேர்தலுக்கு முன்னோடியாக யாழ். மாநகரசபைத் தேர்தலுக்காக "ஜனநாயகன்" தளத்தினால் நடாத்தப்பட்ட இணையக் கருத்துக் கணிப்பில் அதிகூடிய வாக்குக்களை வெற்றிலைச் சின்னத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது.

ஈபிடிபி அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 75 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்திலும், ஈபிஆர்எல்எவ், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி 14 சதவீத வாக்குக்களைப் பெற்று இரண்டாம் இடத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 11 சதவீதத்தினைப் பெற்று மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

இத் தேர்தல் கருத்துக் கணிப்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எவ்வித வாக்குக்களுக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது இணையக் கருத்துக் கணிப்பு மாத்திரமே, நிஜ தேர்தல் என்ன முடிவினைக் கொண்டு வருகின்றதோ தெரியாது, நாளை வரை பொறுத்திருப்போம்!