

யாழ் பல்கலைக் கழகத்துக்கு இன்று விஜயம் செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான திரு.டக்ளஸ் தேவானந்தாவினை நேரில் சந்தித்த திரு.ஜெயசீலன் ஜெயந்தன் தனது ஆதரவினைத் தெரிவித்து வெற்றிலைச் சின்ன வெற்றிக்காக பாடுபடுவேன் எனவும் உறுதி வழங்கினார்.
மாநகர சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் ஜெயசீலன் ஜெயந்தன் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.
