
யாழ். மாநகரசபைத் தேர்தல் சூடு பிடித்துள்ள இந்த நேரத்தில் ஜனநாயக வழி முறைகளைக் கையாள வேண்டிய அகிம்சையைப் போதிக்கக் கூடிய தந்தை செல்வாவின் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சகிப்புத் தன்மைக்கான விருது பெற்ற ஆனந்தசங்கரி ஈபிடிபி யின் தேர்தல் வெற்றியைச் சகித்துக் கொள்ளாமல் வன்முறையில் நாட்டம் கொள்வது காத்திரமானதாக அமையவில்லை. தாக்குதலுக்கு இலக்கான மனுவல் மங்களநேசன் காயங்களுள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத் தாக்குதல் சம்பவத்தையடுத்து யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 வேட்பாளர்கள் உட்பட 10 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
