www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, August 3, 2009

யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபடும் சங்கரியின் கூட்டணி !

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் வெற்றிலைச் சின்னத்தில் இலக்கம் 3 இல் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர் மனுவல் மங்களநேசனின் அரியாலை வீட்டினுள் கடந்த 2009.08.02 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் அத்துமீறி நுளைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரியின் உதவியாளர்கள் அபேட்சகர் மனுவல் மங்களநேசன் அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

யாழ். மாநகரசபைத் தேர்தல் சூடு பிடித்துள்ள இந்த நேரத்தில் ஜனநாயக வழி முறைகளைக் கையாள வேண்டிய அகிம்சையைப் போதிக்கக் கூடிய தந்தை செல்வாவின் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சகிப்புத் தன்மைக்கான விருது பெற்ற ஆனந்தசங்கரி ஈபிடிபி யின் தேர்தல் வெற்றியைச் சகித்துக் கொள்ளாமல் வன்முறையில் நாட்டம் கொள்வது காத்திரமானதாக அமையவில்லை. தாக்குதலுக்கு இலக்கான மனுவல் மங்களநேசன் காயங்களுள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத் தாக்குதல் சம்பவத்தையடுத்து யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 வேட்பாளர்கள் உட்பட 10 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.