www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Sunday, October 18, 2009

வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருந்து யாழ்.வந்த 1066 பேர்!

வன்னி யுத்தத்தில் சிக்கியதால் இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் கோப்பாய் பிரதேசங்களைச் சேர்ந்த 366 குடும்பங்களின் 1066 பேர் முதற்கட்டமாக இன்று (18.10.2009) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இம்மக்களுக்கான பதிவுகள் பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் எதிர்வரும் புதன்கிழமை அவர்களது பிரதேச செயலகங்களில் 5000 ரூபா வீதம் முற்பணம் வழங்கப்படுவதுடன் மேலும் 20000 ரூபா அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும்.

அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.அசோக் சந்திரகுமார், வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் உட்பட பல அரச திணைக்கள அதிகாரிகளும் இம் மக்களைச் சென்று பார்வையிட்டனர்.


மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.