www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, August 16, 2010

கிளிநொச்சி சாந்தபுரம் மக்களுடன் பா.உ. சந்திரகுமார்!

வன்னி யுத்தத்தில் சிக்குண்டு நிற்கதியாகியுள்ள கிளிநொச்சி சாந்தபுரம் மக்களை 15.08.2010 ஆம் நாளன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.அசோக் சந்திரகுமார் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அம் மக்கள் தங்களை வெகுவிரைவில் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்ட போதிலும், வெகு விரைவில் உங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு தான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்ததுடன், இவ் வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவதாக பா.உ. சந்திரகுமார் குறிப்பிட்டார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.