
வன்னி மக்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில் மீள்வாழ்வுக்குத் திரும்பியுள்ள இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் அனைத்தும் இலகு கடனை இலகு முறையில் வழங்கி அவர்களின் ஒளிமயமான வாழ்கைக்கு உதவ முன்வர வேண்டும். தொழில் முயற்சியாளர்கள் தொழில் வாய்ப்புக்களைத் தேர்ந்தெடுக்கும் போது மூலப்பொருள், சந்தை வாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் இதற்கு எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உங்களுக்கு உதவத் தயாராகவுள்ளாரெனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வடமாகாண மத்திய வங்கி முகாமையாளர் திரு.சிறிதரன், அரசாங்க அதிபர், வங்கி முகாமையாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
