www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Wednesday, September 16, 2009

யாழ் குடாவுக்கு தமிழ்ப் பொலிஸார்!

யாழ் குடாநாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பணுவதற்காக ஸ்ரீலங்கா காலாட்படைக்கு தமிழர்களைச் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதன் முதற் கட்டமாக பொலிஸ் சேவைக்கு ஆண்/பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரி (எஸ்.ஐ) போன்ற பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

யாழ் குடாவில் சட்டமும் ஒழுங்கும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனில் தமிழ்ப் பொலிஸ் நிர்வாகம் தேவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து இந் நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் குடாவைச் சேர்ந்த மேற்படி பதவிக்குத் தகுதியானவர்கள் அவரவர் பிரிவுகளில் உள்ள பிரதேச செயலகம் மற்றும் உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.