www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Thursday, September 24, 2009

வலிகாமம் பகுதியில் கோப் சிட்டிகளை அமைச்சர் டக்ளஸ் திறந்து வைத்தார்!

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல நலத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன, இதனை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்றார்.

இதன் ஓர் அங்கமாக "கோப் சிட்டி" பல இடங்களிலும் திறக்கப்பட்டு வருவது சகலரும் அறிந்ததே, இதன் ஓர் கட்டமாக வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட குப்பிளான் மற்றும் ஏழாலை பகுதிகளிற்கான கோப் சிட்டிகளை இன்று 24 ஆம் திகதி அமைச்சர் திறந்து வைத்தார்.