www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Thursday, July 16, 2009

வவுனியா நகரசபைத் தேர்தல் தொடர்பான ஈபிடிபியின் கலந்துரையாடல்

வவுனியா நகரசபைத் தேர்தல் சூடு பிடித்துள்ள இந் நேரத்தில் தேர்தற் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா தலைமையில், நகர சபைத்தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்கள், வவுனியா மாவட்ட ஈபிடிபி சிரேஷ்ட உறுப்பினர்கள், சுவிற்சலாந்து பிரித்தானியா கனடா மற்றும் நோர்வே ஆகிய சர்வதேச நாடுகளுக்கான கட்சிப் பிரமுகர்கள் அடங்கலான கட்சிப் பிரதிநிதிகள் விசேட சந்திப்பு நேற்று 2009.07.15 மாலை வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

வுவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தீர்ப்பதற்கான திறவுகோலாக இத் தேர்தல் இருப்பதால் எமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலமே மக்களினதும் கட்சியினதும் எதிர்கால நலன்களை உத்தரவாதம் செய்ய முடியும் என்பதால் எமது பணிகளை உறுதியுடன் முன்னெடுக்க வேண்டுவென ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.