www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Thursday, June 3, 2010

கிளிநொச்சி தருமபுரம் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் அசோக் சந்திரகுமார் விஜயம்!

கடந்த 2010.06.02 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.அசோக் சந்திரகுமார் கிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்துக்கு நேரில் சென்று தருமபுரம் மகா வித்தியாலயத்தில் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

நாகேந்திரபுரம், கட்டைக்காடு, தருமபுரம், புளியம்பொக்கணை, சுண்டிக்குளம் சந்தி, கல்லாறு, கண்ணகிநகர் மற்றும் புன்னைநீராவி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.


மீள்குடியேற்றம், விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட பொருட்களை மீளப் பெறுதல், விவசாயம் மேற்கொள்வதற்கான உதவி, முன்பள்ளிகளை மீள இயங்க வைத்தலும் ஆசிரியர் பற்றாக்குறைக்கான நிவர்த்தியும், காணி உத்தரவாதம், போக்குவரத்து போன்ற பல முக்கியப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் தமது தேவைகளைக் கோரினர்.

இம்மக்களது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதுடன், கிளிநொச்சியிலுள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் நேரில் வந்து நிலைமைகளை அவதானிக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அசோக் சந்திரகுமார் மேற்படி சந்திப்பில் குறிப்பிட்டார்.

மேலதிக படங்களுக்கு அழுத்தவும்.