
வலைப்பாடு மீள்குடியேற்ற மக்களுக்கான வீட்டுவசதி, முன்பள்ளிக்கான ஏற்பாடுகள், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான உதவி, கணவரை இழந்த பெண்களுக்கான சுயதொழில் முயற்சிகள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சிகள் போன்ற தேவைகளை நிறைவேற்றித் தருமாறு பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இம் மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த பா.உ. சந்திரகுமார், கூடிய விரைவில் இம் மக்களின் தேவைகள் அனைத்தும் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்டார்.
