
இந் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஆசோக் சந்திரகுமார், பூநகரிப் பிரதேச செயலகத் திணைக்களங்களின் தலைவர்கள், அதிகாரிகள், சர்வதேச மற்றும் உள்ளூர் தொண்டர் அமைப்புப் பிரதிநிதிகள், பொதுமக்கள், கிராம சேவையாளர்கள், மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் மற்றும் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மீள்குடியேற்ற மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் வீட்டு வசதி, குடிநீர், மருத்துவம், சுகாதாரம் கல்வி, விவசாயம், கடற்றொழில் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாக இம் செயலணி மாநாடு நடாத்தப்பட்டது.
