
இக் கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமான கலந்துரையாடலுடன் கூடிய மாநாடு நாளை இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டில் சமூகநலத்துறை அமைச்சரும் வடக்கிலங்கை விசேட செயலணித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வட மாகாண ஆளுனர், வவுனியா அரசாங்க அதிபர், பாதுகாப்பு அமைச்சின் வவுனியாப்பகுதி ஒருங்கிணைப்பாளர், தேச நிர்மாண அமைச்சின் வவுனியா இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்குபற்றுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.
நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுக்க வேண்டுமென ஈபிடிபி விடுத்த கோரிக்கைக்கு செவிமடுத்து இவ் நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுத்த ஜனாதிபதிக்கு இடம்பெயர்ந்த மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்வாறே மற்றைய கோரிக்கைகளையும் ஜனாதிபதி விரைவில் செயற்படுத்துவாரென அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.