www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Sunday, April 5, 2009

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் சார்பில் ஜனாதிபதிக்கு நன்றி

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் ஈடுபாடு காட்டி வரும் ஈபிடிபி செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் அமைச்சரும், மற்றும் வடக்கிலங்கை விசேட செயலணித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா இவ் நலன்புரி நிலையங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக 26 கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

இக் கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமான கலந்துரையாடலுடன் கூடிய மாநாடு நாளை இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சமூகநலத்துறை அமைச்சரும் வடக்கிலங்கை விசேட செயலணித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வட மாகாண ஆளுனர், வவுனியா அரசாங்க அதிபர், பாதுகாப்பு அமைச்சின் வவுனியாப்பகுதி ஒருங்கிணைப்பாளர், தேச நிர்மாண அமைச்சின் வவுனியா இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்குபற்றுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுக்க வேண்டுமென ஈபிடிபி விடுத்த கோரிக்கைக்கு செவிமடுத்து இவ் நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுத்த ஜனாதிபதிக்கு இடம்பெயர்ந்த மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்வாறே மற்றைய கோரிக்கைகளையும் ஜனாதிபதி விரைவில் செயற்படுத்துவாரென அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.