
இவ் 26 கோரிக்கைகளை ஆராயும் முகமாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் இன்றைய தினம்
(05.04.2009) விஷேட உயர்மட்ட மாநாடொன்று வட மாகாண ஆளுனரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த விஷேட மாநாட்டில் வட மாகாண ஆளுனர் டிக்ஷன் தெல பண்டார, சமூகசேவைகள் அமைச்சரும் வடமாகாண விஷேட செயலணித் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அனர்த்த நிவாரண மீள்குடியேற்ற அமைச்சர் ரீஷாத் பதியுதீன், வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், வன்னி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வவுனியா மாவட்ட சிவில் ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் எல்.சி.பெரேரா, வவுனியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன குணசேகர மற்றும் வட மாகாண பிரதம செயலாளர் ரங்கராஜன் உட்பட பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
¤ வவுனியா மாவட்ட பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை ஒன்றரை மாதகாலத்தில் நிவாரணக் கிராமங்களில் குடியமர்த்துவதின் மூலம் பாடசாலைகளில் மாணவர்கள் கல்வியைத் தொடர நடவடிக்கை எடுத்தல்.
¤ இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களிலும் நிவாரணக் கிராமங்களிலும் அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மெற்கொள்ளல்.
¤ இம் மக்களின் குடி நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்.
¤ இந் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் தேவைகளை அவ்வப்போது இனங்கண்டு அவற்றினை உடனுக்குடன் நிவர்த்தி செய்தல்.
இம் விஷேட மாநாட்டில் இவ்வாறான முக்கிய தேவைகளுக்கு உடன் தீர்வு காணப்பட்டதுடன் இவற்றை உடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
