www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Monday, April 6, 2009

புதுக்குடியிருப்பு பூரணமாக ஸ்ரீலங்கா படை வசம்

வன்னி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதிக் கோட்டையாகக் கருதப்பட்ட புதுக்குடியிருப்புப் பகுதியை நேற்று (05.04.2009) பூரணமாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா அரச ஊடகங்கள் தெரிவித்தன.

இப் படை நடவடிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய படைத் தளபதிகளான தீபன், நாகேஷ், விதுஷா, துர்க்கா, கமலினி உட்பட 300 பேருக்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என படை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு படை நடவடிக்கையில் 58 ஆம் படைப் பிரிவினர் வடக்கு எல்லைப் பக்கமாகவும் 53 ஆம் படைப் பிரிவினர் தெற்கு எல்லைப் பக்கமாகவும் தாக்குதலைத் தொடுத்து முன்னேறிய வேளை, விடுதலைப் புலிகள் 58 ஆம் படைப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு 150 பேருக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர், இத் தாக்குதலிலேயே தளபதி தீபன், மட்டக்களப்பு படைத் தளபதியாக இருந்த நாகேஷ், பெண் படைத் தளபதிகளான விதுஷா, துர்க்கா மற்றும் கமலினி போன்றோரின் சடலங்கள் ஸ்ரீலங்கா படையிரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அரச ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.


அரச ஊடக வீடியோ பதிவு : 06.04.2009


விடுதலைப் புலிகளின் தளபதி தீபன்

விடுதலைப் புலிகளின் தளபதி விதுஷா