www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Sunday, April 19, 2009

புதுமாத்தளன் பகுதியிலிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுக்குடியிருப்பு பகுதிக்கு வருகை.

ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள யுத்த சூனியப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் கேடயமாக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பொருட்டு இன்று 2009.04.20 ஆம் திகதி காலை புதுமாத்தளன் பகுதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட மண்ணரணை ஸ்ரீலங்கா இராணுவ தரப்பு கைப்பற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து யுத்த சூனியப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனைப் பயன்படுத்தி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்று ஸ்ரீலங்கா படையினர் நிலை கொண்டுள்ள புதுக்குடியிருப்பு போன்ற பகுதியை நோக்கி வந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

நேற்றைக்கு முன்தினம் 2009.04.18 ஆம் திகதி புதுமாத்தளன் பகுதியிலிருந்த 1253 சிறார்கள், 853 பெண்கள், 732 ஆண்கள் அடங்கலான 2838 பேர் ஸ்ரீலங்கா இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.