www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Saturday, April 18, 2009

கருணா அம்மானால் திறந்து வைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், ஜனநாயக வழிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி திரு.மஹிந்த ராஜபக்ஷவினால் நியமன பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்ற கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது அரசியல் முகவரி கூறிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியற் காரியாலங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார், இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முரளிதரனுக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் பதவி ஜனாதிபதியினால் அண்மையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து அமைச்சர் முரளிதரன் உரையாற்றினார்.