www.jananayakam.net.ms or www.jananayakan.tk, Email: jananayakam.gmail.com ....

Sunday, April 5, 2009

பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்தீன் சுட்டுக் கொலை

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரின் பணிப்பாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ஜனாப் எச்.எல். ஜமால்தீன் கல்முனை மருதமுனை பெரிய பள்ளிவாசலில் இன்று (05.04.2009) இரவு 7.30மணியளவில் தொழுகையை முடித்து விட்டு வெளியே சென்ற போது துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், சடலம் தற்போது கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா காவல்துறை பயிற்சி கல்லூரியின் பணிப்பாளரான காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் இன்று இரவு 7:30 நிமிடமளவில் மருதமுனை பகுதியில் வைத்து எம்மால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாரென தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.